விஜயகாந்த் குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவருடைய மைத்துனர் எல்.கே.சுதீஷ் அவர்கள் பேட்டி அளித்திருந்தார்

இந்த நிலையில் விஜயகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்பதை அறிந்து அவருடைய கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் அவருடைய கட்சித் தொண்டர்களுக்கு பேரிடையாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதுதான் தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக வந்துள்ள தகவல்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

விஜயகாந்தை அடுத்து விஜயகாந்தின் மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

ஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து மொட்டைக் கடுதாசி போட்டால் என்னாகும்??? புது விளக்கம்!!!

ஊழர் புகார் குறித்த தகவல்கள் மொட்டை (அடையாளம் காண முடியாத நபர்) கடிதம் மூலம் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு சிக்ஸரை மிஸ் செய்ததற்கு நன்றி: ராகுல் திவெட்டியாவுக்கு நன்றி கூறிய யுவராஜ்சிங்!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 223 ரன்கள் குவித்தது.

இசை மேதையுடன் எஸ்பிபி: அரிய புகைப்படத்தை வெளியிட்ட விவேக்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான நிலையில் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் அவருடன் பழகிய நாட்கள்,

30 நாட்களில் உருவாகும் சிம்பு படம்: 'மாநாடு'க்கு முன் முடிக்க திட்டம்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'.

குடிநீரில் மூளையைத் திண்ணும் அமீபா!!! கொலை நடுங்க வைக்கும் தகவல்!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விநியோகிக்கப்படும் மாநகரக் குடிநீரில் மூளையை உண்ணும் அமீபா கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.