close
Choose your channels

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கேப்டன்....!தொண்டர்கள் மகிழ்ச்சி....!

Thursday, May 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று(19.05.2021) அதிகாலை 3.30 மணியளவில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் கேப்டன்.

தேமுதிக-வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே, உடல் நலம் சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் அவர் அரசியலில் ஈடுபடாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட, கட்சி பிரச்சாரத்திற்காக வெளியில் செல்லாமல் இருந்தார். குறிப்பிட்ட ஒரு தொகுதிக்கு மட்டும் சென்று கையசைத்து வாக்குகள் கேட்டார். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக-வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட தேமுதிக தோல்வியை தழுவியது. இதனால் அவ்வப்போது அரசியல் குறித்த ஒருசில அறிக்கைகளை வெளியிட்டு வந்தார் விஜயகாந்த்.

தற்போது மருத்துவமனையில் இருந்து கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குணமாகி வந்த செய்தி, தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos