close
Choose your channels

விஜயகாந்த் மகன் ஹீரோ, அனுராக் காஷ்யப் வில்லன்.. 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குனராகும் பிரபலம்..!

Saturday, March 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனராகும் பிரபலம் ஒருவர் விஜயகாந்த் மகன் ஹீரோவாகவும் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார் என்பதும், இவரது இயக்கத்தில் உருவான ’சுப்ரமணியபுரம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. அதனை அடுத்து அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ’ஈசன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் தற்போது 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் சசிகுமார் சந்தித்து இந்த படம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.