close
Choose your channels

காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ வீரரை சந்திக்க விரும்பிய தளபதி விஜய்!

Saturday, March 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாஸ் நடிகராக இருந்தாலும் தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து வருவதும், ரசிகர்களின் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களிலும் கலந்து கொண்டு வருபவர் என்பதும் ரசிகர்கன் இன்ப, துன்பங்களில் கலந்து கொண்டு அவர்களுகடன் நெருக்கமாக இருந்து வருபவர் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் என்ற விஜய் ரசிகர் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த தமிழ்ச்செல்வன், தற்போது காஷ்மீரில் நிலவிவரும் பதட்டமான சூழ்நிலையால் விடுமுறை ரத்தாகி மீண்டும் பணிக்குத் திரும்பிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த விஷயத்தை தனது நண்பரும் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பாண்டியிடம் பகிர்ந்துள்ளார். இந்தத் தகவலை விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்திடம் பாண்டி பகிர, அப்படியே இந்த விஷயம் விஜய்க்கும் சென்றடைந்துள்ளது. உடனே தமிழ்ச்செல்வனை செல்போன் மூலம் தொடர்புகொண்ட தளபதி விஜய். “நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எதுவும் ஆகாது. வெற்றியுடன் திரும்புவீர்கள். நீங்கள் திரும்பி வந்தவுடன் உங்களைச் சந்திக்கிறேன்” என விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.