'இருமுகன்' படத்தின் ரிலீஸ் திட்டம் இதுதான்

  • IndiaGlitz, [Wednesday,April 20 2016]
சீயான் விக்ரம் முதன்முதலாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'இருமுகன்' படத்தினை அரிமாநம்பி ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் நித்யாமேனன் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருவதாகவும், படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தால் வரும் ஜூலையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படம் கடந்த அக்டோபரில் வெளியான நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பே அவருடைய அடுத்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னையில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னை படப்பிடிப்பு முடிந்தபின்னர் லடாக் மற்றும் பாங்காக் பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

More News

கங்கனாவுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்குமா?

குவீன் மற்றும் 'தானு வெட்ஸ் மானு' ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக இரண்டு முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மூன்றாவது...

விஜய்யுடன் எனது நட்பு எப்படி? மனம் திறக்கும் சூர்யா

இளையதளபதி விஜய்யும் நடிகர் சூர்யாவும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நட்புடன் இருந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே...

அஜித்தும் கவுண்டமணியும் ஒரே ரகம் : சந்தானம்

கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது....

நட்சத்திர கிரிக்கெட் வதந்திக்கு தனுஷ் வைத்த முற்றுப்புள்ளி

கடந்த ஞாயிறு அன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியால் நடிகர் சங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும்,...

செங்கல்பட்டில் தெறி ஏன் ரிலீஸ் ஆகவில்லை : தாணு

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்த நிலையில் செங்கல்பட்டு ஏரியாவில்...