close
Choose your channels

திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை: 'விக்ரம்' நடிகரின் பதிவு வைரல்

Friday, November 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படமான ’விக்ரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படமாக பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகின் பிரபல நடிகரான நரேன், தமிழில் மிஷ்கின் இயக்கிய ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’நெஞ்சிருக்கும் வரை’ ’பள்ளிக்கூடம்’ ’அஞ்சாதே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது சமீபத்தில் வெளியான ’விக்ரம்’ திரைப் படத்தில் அவரது நடிப்பு மிகச் சிறந்த அளவில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு நடிகர் நரேன், தொலைக்காட்சி நடிகை மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே தன்மயா என்ற மகள் இருக்கும் நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனை அடுத்து நரேன் - மஞ்சு தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

நடிகர் நரேன் தற்போது மூன்று மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’கைதி 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.