விக்ரமின் 'கோப்ரா' பட நடிகருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

சியான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் சமீபத்தில் அவரது மனைவி கர்ப்பமுற்றார். இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக இர்பான் பதான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் தனது குழந்தைக்கு சுலைமான் கான் என்று பெயர் வைத்துள்ளதாகவும் குழந்தை மற்றும் தாயார் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கும் அவரது குழந்தைக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தையை கையில் ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை இர்பான் பதான் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தேவையில்லாமல் வார்த்தையை விடாதே: அமீரை எச்சரிக்கும் பிரியங்கா!

தேவையில்லாமல் வார்த்தையை விடாதே என அமீரை பிரியங்கா எச்சரிக்கும் விதமாக கூறுவது இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி!

கொரோனா அதிகரிப்பு காரணமாகச் சென்னையில் தற்போது ஒரு இடத்தில் கட்டுப்பாட்டு

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

அசுர வேகத்தில் தல தோனியின் சாதனையை முறியடித்த இளம் வீரர்!

கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் விக்கெட் கீப்பரின் பணி மிகவும் பலம் பொருந்தியது. அப்படியிருந்துகொண்டு அந்த வீரர்

மனைவியை விவகாரத்து செய்தார் பிரபல தமிழ் இசையமைப்பாளர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.