அருள்நிதி இயக்குனருடன் கைகோர்க்கும் சீயான் விக்ரம்

  • IndiaGlitz, [Wednesday,March 09 2016]
சீயான் விக்ரம் தற்போது ஆனந்த்சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் தெரிந்ததே. விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யாமேனன் நடித்து வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லடாக் மற்றும் பாங்காக்கில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 'இருமுகன்' படத்தை அடுத்து விக்ரம், 'நான் சிகப்பு மனிதன்' இயக்குனர் திரு இயக்கத்தில் 'கருடா' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த இரண்டு படங்களை அடுத்து விக்ரம், அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜய் ஞானமுத்து கூறிய த்ரில் கதை ஒன்று விக்ரமுக்கு பிடித்துள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. அஜய்ஞானமுத்து ஏற்கனவே அருள்நிதி நடித்த 'டிமாண்ட்டி காலனி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார்த்திக் சுப்புராஜூடன் மணிரத்னம்-கெளதம் மேனன் இணைவார்களா?

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது 'இறைவி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது...

சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ரகசியம்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த் 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்...

கே.வி.ஆனந்தின் அடுத்த பட ஹீரோ குறித்த புதிய தகவல்

தனுஷ், அம்ரியா நடித்த 'அனேகன்' படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டபோதிலும் இந்த படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்...

தேர்தல் கமிஷனுக்கு திரையுலகம் விடுத்த வேண்டுகோள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வரும் மே மாதம் 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகள் விதிகள் அமலுக்கு வந்துள்ளது...

அஜித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

தல அஜித் நடித்த 'வேதாளம் வெற்றிப்படத்தை அடுத்து அவருடைய அடுத்த படம் எப்போது தொடங்கும் என ஆவலுடன்...