close
Choose your channels

திடீரென 'தங்கலான்' படப்பிடிப்புக்கு செல்லாத விக்ரம்.. அதிர்ச்சி காரணம்..!

Wednesday, May 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்பில் விக்ரம் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய ரிகர்சலின்போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து விக்ரம் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோசனுக்கு விக்ரம் செல்ல வேண்டி இருந்ததால் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு சில வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் முடிவடைந்து ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மீண்டும் ‘தங்கலான்’ படத்தில் விக்ரம் கவனம் செலுத்தினார்.

நேற்று முதல் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் விக்ரம் அதில் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்றின் ரிகர்சலில் விக்ரம் ஈடுபட்டிருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் விக்ரம் அல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் காயத்திலிருந்து விக்ரம் முழுமையாக குணமாகி விடுவார் என்றும் அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.