தட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க: நோபால் சர்ச்சை குறித்து பிரபல நடிகர்

சமீபத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் ஒரு அம்பயர் நோபால் கொடுக்க, இன்னொரு அம்பயர் நோபால் இல்லை என்று கூறியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து மைதானத்திற்குள் வந்த தோனி, அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அவருக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் பேட்ஸ்மேன் சேவாக், தோனியை இரண்டு அல்லது மூன்று போட்டிகள் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விக்ரம்பிரபு தனது சமூக வலைத்தளத்தில், 'தட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க. அப்ப யாரை விட்டு வைப்பாங்க? தவறு செய்ததற்கான அத்தாட்சியாக காணொலி இருக்கிறது. அது போதாது. ஆனால் அந்தத் தவறைத் தட்டிக் கேட்ட விதம் தவறு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் இந்த ஒட்டுமொத்த அமைப்புமே தவறில்லையா? எனது தலைவனை (இந்தியா/சிஎஸ்கே) விட்டுவிடுங்கள். ஒரு விளையாட்டை, நாட்டை இதை வைத்து மதிப்பிடாதீர்கள். எல்லோரும் பார்த்து கொண்டிருக்கின்றனர்'' என்று விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
 

More News

ராகவா லாரன்ஸின் ஆவேச அறிக்கைக்கு பின் வருத்தம் தெரிவித்த அரசியல் தலைவர்

பிரபல நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் நேற்று பெயர் குறிப்பிடாமல் ஒரு அரசியல் தலைவர் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததில் இருந்தே அணியில் யார் யார் இடம்பெறுவார்கள்

கமல்ஹாசன் விளம்பர வீடியோவுக்கு வந்த சிக்கல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  கடந்த சில நாட்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது வாக்குறுதிகளை அளிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் அவ்வபோது இணையும் பிரபலங்கள் குறித்த செய்தியை பார்த்து வருகிறோம்

துலாபார நிகழ்ச்சியின்போது மண்டை உடைந்தது: காங்கிரஸ் வேட்பாளர் காயம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிதரூர் துலாபார நிகழ்ச்சியின்போது காயமடைந்தார்.