தியேட்டருக்கு படம் பார்க்க வந்த விக்ரம்.. ஆட்டோவில் வீடு திரும்பியது ஏன்?


Send us your feedback to audioarticles@vaarta.com


விக்ரம் நடித்த நடித்த ’வீரதீர சூரன்’ என்ற திரைப்படம் நேற்று மாலை வெளியானது. முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் விக்ரம் தனது ரசிகர்களுடன் படம் பார்த்தார். படம் முடிந்தபின், தியேட்டரைவிட்டு வெளியேறிய போது, ரசிகர்களின் பெரும் கூட்டம் காரணமாக அவரால் தனது காருக்கு செல்ல முடியவில்லை. இதனால், அவருடன் வந்தவர்கள் அருகிலிருந்த ஒரு ஆட்டோவை பிடித்து, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் நடித்த ’வீரதீர சூரன்’ திரைப்படம் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக மாலை தான் முதல் காட்சி வெளியானது. இதனை தொடர்ந்து, சென்னையின் ஒரு பிரபல திரையரங்கில் விக்ரம் ரசிகர்களுடன் படம் பார்த்தார்.
படத்தைக் கண்டு களித்து விட்டு, வீடு திரும்பும் பொருட்டு அவர் தியேட்டரை விட்டு வெளியேறியபோது, ஏராளமான ரசிகர்கள் அவரைச் சுற்றி நின்று வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும், அவருடன் செல்பி எடுக்க முயன்ற போது, ரசிகர்களின் அன்பு மழையில் சிக்கிக்கொண்டார்.
அவருடன் வந்தவர்கள் அருகிலிருந்த ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து, விக்ரமை அதில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு, அவரது ஆடம்பர காரை டிரைவர் இயக்கி வீட்டுக்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில், ’வீரதீர சூரன்’ படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரமுக்கு ஒரு சூப்பர் ஹிட் வெற்றி படம் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com