எங்களை விட மாயா தான் முக்கியமா? பிக்பாஸ் போட்டியாளரை கழுவி ஊற்றும் குடும்ப உறுப்பினர்..!

  • IndiaGlitz, [Saturday,January 13 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவரை அவருடைய குடும்ப உறுப்பினரே, ‘எங்களை விட மாயா தான் முக்கியமா என ஆதங்கத்தோடு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் விக்ரம் சரவணன். அவர் எவிக்சன் ஆனபோது மாயா அவரை அவமானப்படுத்தினார் என்றும் விக்ரம் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று ஆவேசமாக பேசினார் என்பதும் தெரிந்ததே. வெளியே வந்த பின்னர் விக்ரம் கூட மாயாவை இப்போது தான் புரிந்து கொண்டதாக சில பேட்டிகளில் கூறினார்.

ஆனால் இந்த வாரம் மீண்டும் விக்ரம் சரவணன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றபோது மீண்டும் மாயாவுடன் தனது நட்பை தொடர்ந்து உள்ளார். தன்னுடைய பலவீனத்தை உபயோகித்துக் கொண்ட மாயாவுடன் மீண்டும் அவர் நட்பில் இருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விக்ரம் சரவணன் சகோதரி தனது சமூக வலைத்தளத்தில் ’உங்களுடைய குடும்பத்தினரை விட வேறொருவருக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர், ‘குடும்பத்தினரை விட உனக்கு மாயா தான் முக்கியமா தெரியுதா என்பதை அவர் மறைமுகமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான தினேஷ் மற்றும் விசித்ரா ஆகிய இருவருக்கும் இடையே ஆரம்பம் முதலில் சண்டை வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தினேஷின் மனைவி ரக்சிதா தனது சமூக வலைத்தளத்தில் விசித்ராவுக்கு ஆதரவு கொடுத்து உள்ளார். ஒரு போட்டியாளரின் வெற்றி என்பது இதயங்களை வெல்வது தான். என் அன்பை நீங்கள் வென்றது மட்டுமல்ல என் ஆன்மாவையும் வென்றீர்கள் என விசித்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரக்சிதா பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும்போது அவருக்கு தினேஷ் முழு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது தினேஷ் போட்டியாளராக இருக்கும்போது அவர் குறித்து ரக்சிதா எந்த ஒரு பதிவு கூட செய்யவில்லை என்பது மட்டுமின்றி தினேஷை வெறுக்கும் விசித்ராவுக்கு அவர் ஆதரவளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அயலான்' 'கேப்டன் மில்லரை விட பல மடங்கு வசூல் செய்த 2 படங்கள்.. பொங்கல் வின்னர் யார்?

பொங்கல் விருந்தாக 'அயலான்' 'கேப்டன் மில்லர்' 'மிஷின் சாப்டர் ஒன்' மற்றும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' ஆகிய நான்கு தமிழ் நடிகர்களின் படங்களும், மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்' மற்றும்  தேஜா நடித்த

வெளிநாட்டு பயணம் டூ படப்பிடிப்பு தளம்.. இடையில் நோ ரெஸ்ட்.. கலக்கும் நடிகர் விஷால்...!

சமீபத்தில் நடிகர் விஷால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தியும் அதன்பிறகு அவரின் இல்லத்திற்கு சென்று அவரின்

சிறகடிக்க ஆசை: விஜயா, ரோஹினியை எதிர்த்து பேச ஆரம்பித்த மீனா.. இனி தான் ஆட்டம் ஆரம்பம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் இதுவரை மீனா தனது  தன்னை அவமானப்படுத்தும் விஜயா, ரோஹினியை எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்த நிலையில்

100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த 'கூச முனிசாமி வீரப்பன்': தள்ளுபடி கூப்பன் அறிவித்த ZEE5..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும்  Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான   'கூச முனிசாமி வீரப்பன்' டாக்குமெண்ட்ரி சீரிஸ்  100 மில்லியன்

10 வருடங்களுக்கு பின் உருவாகும் 2ஆம் பாகம்:  அஜித், விஜய் இயக்குனரின் அடுத்த படம்..!

அஜித், விஜய் படங்களின் இயக்குனர் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 10 வருடங்களுக்கு பின் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.