நாங்கள் நினைத்தது நடந்தது.. 'மகான்' பட வசனத்துடன் விக்ரம் வெளியிட்ட வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் விக்ரம் நடித்த "வீரதீர சூரன்" என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் குறித்து நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"ஒரே ஒரு வாழ்க்கை, வரலாறாக வாழ்ந்து வாழ்ந்து விட்டு போக வேண்டும்" என ஒருவன் எளிமையாக சொல்லிவிட்டு சென்றான் என்ற "மகான்" பட வசனத்தை நினைவு கூர்ந்த விக்ரம், "இந்த வாழ்க்கை இருக்கிறதே, ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும்" என்று தெரிவித்தார்.
உதாரணமாக, "வீர தீர சூரன்" படத்தின் ரிலீஸுக்கு முன்பு, இந்த படத்தை பார்த்த அனைவரும் எங்களை பயங்கரமாக பாராட்டினார்கள். ஆனால் அதன்பின் அனைவருக்கும் தெரிந்த பிரச்சனை, சட்டப் பிரச்சனை. உயர் நீதிமன்றம் இந்த படத்தை நான்கு வாரங்கள் ரிலீஸ் செய்யக்கூடாது என தடை விதித்தது.
"ஒரு படம் முதல் காட்சி ரிலீஸ் ஆகவில்லை என்றாலே அவ்வளவுதான்" என்று கூறுவார்கள். ஆனால், இந்த படம் இரண்டு காட்சிகள் ரிலீசாகாமல், மாலை காட்சிதான் ரிலீஸானது. ஆனால், படம் வெளியானவுடன் நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
நானும், இயக்குநரும், இதில் நடித்த அனைவரும், தொழில்நுட்பக் குழுவினரும் இந்த படத்திற்காக அவ்வளவு உழைத்துள்ளோம். இந்த படத்தை எப்படியாவது ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று என்னால் முடிந்ததை செய்தேன்.
படம் வெளியானவுடன் நாங்கள் எதிர்பார்த்ததை விட பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தன. நாங்கள் என்ன நினைத்தோமோ, அதுவும் நடந்தது.
இந்த படத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. படம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என உறுதியாக நம்புகிறேன். இதுவரை பார்த்தவர்கள் மகிழ்ந்திருப்பீர்கள்; பார்க்காதவர்கள் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments