கதறி அழும் விக்ரமன்... என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,January 20 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடை இருக்கும் நிலையில் இந்த சீசனின் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் விக்ரமன் கதறி அழும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கடந்த 100 நாட்களில் விக்ரமனை இதுவரை ஒரு வலுவான போட்டியாளராகத்தான் அனைவரும் பார்த்து வருகிறோம். எவ்வளவு சோதனை வந்தாலும், அதை தைரியமாக எதிர்த்து போராடும் ஒரு போட்டியாளராகத்தான் பார்த்திருக்கின்றேமே தவிர, எந்த இடத்திலும் அவர் கண்கலங்கவில்லை.

அப்படிப்பட்ட விக்ரமன் திடீரென கதறி அழுகும் வீடியோ வெளியாகி உள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு மிகவும் நெருக்கமான போட்டியாளராக இருந்தவர்களில் ஒருவர் அமுதவாணன். அவ்வப்போது அவரிடம் தான் விக்ரமன் மனம்விட்டு பேசுவார் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் அமுதவாணன் கடைசி நேரத்தில் திடீரென ரூ.11.75 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வீட்டை விட்டு வெளியே செல்ல போகிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் விக்ரமன் தன்னையும் அறியாமல் உடைந்து அழுகிறார். அவருக்கு அமுதவாணனே எப்படி ஆறுதல் கூறுவது என திகைத்து போய் உள்ளார். சக போட்டியாளர்கள் விக்ரமனுக்கு ஆறுதல் கூறி தேற்றுகின்றனர். ஒரு உண்மையான நட்பு இந்த கண்ணீரின் மூலம் வெளிப்படுவதாக இந்த வீடியோவுக்கு பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

முகேஷ் அம்பானியின் மகன் திருமணம்.. குவிந்த பாலிவுட் பிரபலங்கள்!

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாலிவுட் திரை உலகின் பிரபலங்கள் குவிந்தனர். 

யாரும் பயப்பட வேண்டாம், வதந்திகளை நம்பாதீர்கள்: இயக்குனர் சுசீந்திரன்

 நடிகர் விஜய் ஆண்டனி குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவரது உடல் நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இயக்குனர் சுசீந்திரன்தெரிவித்துள்ளார். 

2 சூப்பர்ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் விஷ்ணு விஷால்.. ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?

இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனருடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளதை அடுத்து இந்த படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் இன்னும் 'துணிவு' படம் பார்க்கவில்லையா? இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில்  ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும்

'அரண்மனை' படத்தின் 4வது பாகம்.. மாஸ் நடிகருடன் களமிறங்கும் சுந்தர் சி!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' திரைப்படம் ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் நான்காவது பாகத்தில் மாஸ் நடிகருடன் அவர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.