ஊராட்சி மன்ற தலைவருடன் தனிமையில் பெண் வி.ஏ.ஓ: பொதுமக்கள் உதவியால் கதவை பூட்டிய கணவர்

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டில் தனிமையில் பெண் விஏஓ இருந்ததை அறிந்த அவரது கணவர் பொதுமக்கள் உதவியுடன் வீட்டை வெளியே பூட்டியதால் சிவகங்கை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் என்ற பகுதியில் வி.ஏ.ஓஆக இருந்து வருபவர் வித்யா. இவருக்கும் அதே ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் கண்ணன் என்பவருக்கும் இடையில் முதலில் பழக்கம் ஏற்பட்டு அதன் பின்னர் கள்ளக் காதலாக மாறியதாக கூறப்படுகிறது

இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்ததாக தெரியவந்த நிலையில் இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க அவரது கணவர் உள்பட அந்த ஊர் பொது மக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் கண்ணனின் இல்லத்திற்கு வித்யா வந்ததை அறிந்த அவருடைய கணவர் ஊர் மக்களை திரட்டி கண்ணனின் வீட்டிற்கு வெளியே பூட்டு போட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வித்யாவின் கணவரிடமும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி, வீட்டினுள்ளே அடைக்கப்பட்டிருந்த கண்ணன் மற்றும் வித்யாவை மீட்டனர். இதுகுறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

நான் கிழவின்னா என்னைவிட 5 வருசம் அதிகமான அஜித் யார்? கஸ்தூரி ஆவேசம்

நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரில் பிரச்சினை இருந்து வருகிறது என்பதும் ஒரு சில ரசிகர்கள் எல்லை மீறியதையடுத்து அஜீத் மற்றும் அவரது மேனேஜருக்கு கஸ்தூரி

யாஷிகாவுக்கு திருமணமாகிவிட்டதா? புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்பு

நடிகை யாஷிகா தொழிலதிபர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவாகி வரும் நிலையில்

தமிழகத்தின் அண்டை மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று: பரபரப்பு தகவல்

நேற்று ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகிய பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வீடியோவை பார்த்து கண்கலங்கிய சோனுசூட்: ரியல் ஹீரோவின் உணர்ச்சிபூர்வமான காட்சி!

திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் இந்த கொரனோ காலத்தில் ஏராளமான பொது மக்களுக்கு உதவி செய்ததன் மூலம் ரியல் ஹீரோவாக மாறியுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்

ரஜினி குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னரே வெளியான திரைப்படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'.