close
Choose your channels

அஜித், விஜய் பட வில்லன் நடிகரின் மனைவி, மகன் கைது: அதிர்ச்சி காரணம்

Thursday, January 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவரின் மனைவி மற்றும் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ‘ரெட்’, விஜய் நடித்த குஷி, சுக்ரன், ஆதி உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் ராஜன் பி தேவ். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் ராஜன் பி தேவ் மனைவி சாந்தம்மா மற்றும் மகன் உன்னி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ராஜன் பி தேவ் மகன் உன்னிக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 100 பவுன் தங்க நகைகளை வரதட்சணையாக பிரியங்கா கொண்டு வந்தபோதும் உன்னி மற்றும் அவரது தாயார் சாந்தம்மா ஆகிய இருவரும் பிரியங்காவை மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் வரதட்சினை கொடுமைகளைத் தாங்க முடியாத பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்கொலைக்கு முன் தனது சாவுக்கு உன்னியும் அவரது அம்மாவும் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் உன்னி மற்றும் சாந்தம்மாவை கைது செய்தனர் என்பதும் சாந்தம்மா ஜாமீன் பெற்றதை அடுத்து அவரை ஜாமினில் விடுதலை செய்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.