நேற்று தான் பேசினேன்.. இன்று மாரடைப்பால் மரணம்.. ஒரே ஒரு படம் இயக்கிய இயக்குனர் மறைவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விமல் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கிய இயக்குனர் மாரடைப்பால் காலமான நிலையில் 'நேற்று நான் அவருடன் பேசினேன், இன்று அவருடைய மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்’ என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விமல், புன்னகை பூவே கீதா, சமுத்திரக்கனி, எம்.எஸ் பாஸ்கர் உள்பட பலரது நடிப்பில் உருவான ’காவல்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. உண்மை கதையை வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தவர் இயக்குனர் நாகேந்திரன். இந்த படம் வசூல் அளவில் பெரிய வெற்றி பெறாததால் அதன் பிறகு அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் திரையுலகில் சில பணிகளை அவர் செய்து வந்த நிலையில் இன்று அவர் திடீரென மாரடைப்பால் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளை துவக்கி வைத்திருக்கிறது.
நாட்களும், நொடிகளும் மிக கொடுமையானவை. பூவை உதிர்த்து போடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டு போய்விடுகிறது.
நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு வேதனையானது. காலம் யாருக்கு என்ன செய்ய காத்திருக்கோ என்ற பயத்தை ஏற்படுத்தி செல்கிறது. . சகோதரனாய்.. நெருங்கிய நண்பனாய் பயணித்தவரை சட்டென்று இழந்து போனதில் நெஞ்சம் கலங்குகிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும்... அதிர்ச்சியை தாங்கும் பலத்தையும் இறைவன் தரட்டும். நாகேந்திரன் மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இயற்கையின் மடியில் இளைப்பாறட்டும். என்று பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் தான் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமான நிலையில் தற்போது இன்னொரு இயக்குனரும் காலமாகி இருப்பது திரை உலகினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளைத் துவக்கி வைத்திருக்கிறது.
— sureshkamatchi (@sureshkamatchi) April 26, 2025
நாட்களும், நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்துப்போடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டுபோய்விடுகிறது.
நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு… pic.twitter.com/9EAd64fHvw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments