மீண்டும் திரையில் கார்த்திக்-ஜெஸ்ஸி. கவுதம் மேனன் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 18 2015]

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாரிக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


கவுதம் மேனன் தயாரித்த 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்ற படத்தின் தெலுங்கு பதிப்பான 'கூரியர்பாய் கல்யாண்' என்ற படத்தின் புரமோஷன் விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கவுதம் மேனன், தான் இயக்கிய படங்களில் மிகவும் பிடித்த காதல் படமான 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியை மீண்டும் திரையில் காண பல ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது கவுதம் மேனன், சிம்பு நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் 'விண்ணைத் தாண்டி வருவாயா 2' படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆர்யாவை மீண்டும் துன்புறுத்த விரும்பவில்லை. பாலா

பிரபல இயக்குனர் பாலாவுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கிக் கொடுத்த திரைப்படம் 'நான் கடவுள்'...

பாங்காக் வெடிகுண்டு சம்பவம். நூலிழையில் உயிர் பிழைத்த பிரபல நடிகை

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நேற்று இரவு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் உடல் சிதறி 27 பேர் பலியான செய்தி அனைவரையும் உலுக்கியுள்ள நிலையில்...

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பஞ்ச் வசனங்கள். ஒரு பார்வை

தமிழ் திரையுலகில் பக்கம் பக்கமாக வசனம் பேசி வந்த கதாநாயகர்களை சுருக்கமாக அதே நேரத்தில் நறுக்கான வசனம் பேச வைத்த பெருமை மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களை போய் சேரும்....

'புலி' படத்தின் அமெரிக்க விநியோக உரிமை ரூ.2 கோடியா?

இளையதளபதி விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி...

ரஜினி, கமலை அடுத்து விஜய்யிடம் ஆதரவு கேட்ட விஷால் அணி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாகிவிட்டது...