பதவியேற்ற பத்து நிமிடத்தில் வன்முறை. ஓபிஎஸ் வீடு மீது கல்வீச்சு

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

சசிகலா ஆதரவு அணியின் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு கவர்னரின் அழைப்பின் பேரில் கடந்த சில மணி நேரங்களுக்கு முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில நிமிடங்களில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே ஓபிஎஸ் வீடு அருகே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஓபிஎஸ் வீடு மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கேபி முனுசாமி கூறுகையில், 'சட்டத்தை காக்க வேண்டிய சட்ட அமைச்சரின் ஆதரவாளர்களே வன்முறையில் ஈடுபடுகின்றனர். பதவியேற்ற 10 நிமிடத்தில் காழ்ப்புணர்ச்சியால் வன்முறை நடத்துகின்றனர். சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கியுள்ளோம். இந்த யுத்தத்தில் வெற்றி பெற்று இந்த ஆட்சியை இறக்காமல் ஓய மாட்டோம். சொந்த கட்சிக்காரர்களை தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள், இதுபோன்ற சம்பவம் மேலும் நடக்கக்கூடாது' என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து முதல்வரின் வீடு உள்ள க்ரீன்வேஸ் சாலையீல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றவுடன் ஓபிஎஸ் காரில் இருந்த சைரன் மற்றும் தேசிய கொடி அகற்றப்பட்டது என்பதும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மக்களின் மனதை வெல்வாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார்? என்ற குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது.

2016ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளிவிபர புத்தகம். ஏவிஎம் சரவணன் வெளியிட்டார்

2016 ஆம் ஆண்டிற்கான திரைப்பட புள்ளி விபரங்கள் அடங்கிய புத்தகத்தை திரு: ஏவிஎம் சரவணன் அவர்கள் வெளியிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமியின் புதிய அமைச்சரவை பட்டியல்:

எடப்பாடி பழனிச்சாமி - உள்துறை, ஆட்சிப்பணி, காவல்துறை, பொது மற்றும் நெடுஞ்சாலைத்துறை

எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் ஒரே ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததை அடுத்து இன்னும் ஒருசில மணி நேரங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

சசிகலாவின் சபதம் பாஞ்சாலி சபத்திற்கு இணையானது. ஓ.எஸ்.மணியன்

கடந்த சில நாட்களாக அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சிறை செல்ல நேரிட்டது.