close
Choose your channels

தோனி..தோனி என்று கத்திய ரசிகர்கள். விரக்தியை வெளிப்படுத்திய விராட்.

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

நேற்றைய போட்டியின் போது ரிஷப பந்த் கேட்சை விட்டதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி..தோனி என்று கத்தினார். இதனால் விரக்தியடைந்த கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடையே அமைதியாய் இருக்கும் படி சைகை செய்தார்.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது t20 ன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய விராட் கோலி “இந்திய வீரர்களின் மிக மோசமான பீல்டிங் தோல்விக்கு முக்கிய காரணம்“ என்று தெரிவித்தார்.

நேற்றைய போட்டியின்போது, புவனேஸ்வர் குமார் 5-வது ஓவரை வீசும் போது எவின் லூயிஸ் பந்து ரிஷப் பந்திற்கு கேட்சாக அமைந்தது. ஆனால் ரிஷப் பந்த் அந்த கேட்சை தவறவிட்டார்.இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி, தோனி கூச்சலிட்டனர். இதனால் பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த கோலி கோபமடைந்தார். ரசிகர்களை பார்த்து இதுபோன்று தேவையில்லாமல் கூச்சலிட வேண்டமென்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

கோலியின் இந்த செய்கை இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரிஷப் பந்த் கேட்சை தவறவிட்டால் தோனி, தோனி என்று கூச்சலிட வேண்டாமென்று செய்தியாளர்கள் சந்திப்பின் போதே கோலி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.