தோனி..தோனி என்று கத்திய ரசிகர்கள். விரக்தியை வெளிப்படுத்திய விராட்.

 

நேற்றைய போட்டியின் போது ரிஷப பந்த் கேட்சை விட்டதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி..தோனி என்று கத்தினார். இதனால் விரக்தியடைந்த கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடையே அமைதியாய் இருக்கும் படி சைகை செய்தார்.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது t20 ன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய விராட் கோலி “இந்திய வீரர்களின் மிக மோசமான பீல்டிங் தோல்விக்கு முக்கிய காரணம்“ என்று தெரிவித்தார்.

நேற்றைய போட்டியின்போது, புவனேஸ்வர் குமார் 5-வது ஓவரை வீசும் போது எவின் லூயிஸ் பந்து ரிஷப் பந்திற்கு கேட்சாக அமைந்தது. ஆனால் ரிஷப் பந்த் அந்த கேட்சை தவறவிட்டார்.இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி, தோனி கூச்சலிட்டனர். இதனால் பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த கோலி கோபமடைந்தார். ரசிகர்களை பார்த்து இதுபோன்று தேவையில்லாமல் கூச்சலிட வேண்டமென்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

கோலியின் இந்த செய்கை இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரிஷப் பந்த் கேட்சை தவறவிட்டால் தோனி, தோனி என்று கூச்சலிட வேண்டாமென்று செய்தியாளர்கள் சந்திப்பின் போதே கோலி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

 

More News

2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி..!

2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி முடி சூட்டப்பட்டார்

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு, 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு. பலர் மாயம்.

நியூசிலாந்தில் உள்ள எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்துள்ளவும் போலீசார் தெரிவிக்கின்றனர்...

சுந்தர் பிச்சையால் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடி லாபம் அடைந்த கூகுள் நிறுவனர்கள்

சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்கள் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ

கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி! தொடரும் பெற்றோர்களின் அலட்சியம்

பெற்றோர்களின் அலட்சியத்தால் சுஜித் உள்பட ஒருசில குழந்தைகள் ஆழ்குழாய் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவங்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த கணவரின் மாமா: அரிவாளால் வெட்டி கொலை செய்த இளம்பெண்

23 வயது இளம்பெண் ஒருவரின் கணவரின் அக்காள் கணவர் மயக்க மருந்து கொடுத்து தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்ததை அறிந்து ஆத்திரமடைந்து கணவரின் அக்காள் கணவர்