close
Choose your channels

கோலியா??? டோனியா??? காரசாரமான விவாதத்தின் இறுதி முடிவு என்ன தெரியுமா???

Friday, December 11, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலியா??? டோனியா??? காரசாரமான விவாதத்தின் இறுதி முடிவு என்ன தெரியுமா???

 

இந்திய கிரிக்கட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் டோனி குறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் காரசாரமான விவாதம் ஏற்பட்டு உள்ளது. அந்த விவாதத்தின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைன் ஆகிய இருவரும் பங்கு பெற்றுள்ளனர். மேலும் இந்த நேர்காணலின் போது கடந்த 10 ஆண்டுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்பதுதான் தலைப்பாக இருந்துள்ளது.

சுவாரசியம் மிகுந்த இந்த தலைப்பில் விராட் கோலிதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று சுனில் கவாஸ்கர் சொல்ல ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் டோனிக்கு ஒட்டுப்போட என விவாதமே கடும் சூடுபிடித்து இருக்கிறது. அதில் கோலி குறித்து “இந்திய அணியில் கடந்த 2008 ஆம் அண்டு அறிமுகமான கோலி இதுவரை 86 டெஸ்ட் போட்டி, 251 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகள் என மொத்தம் 22,208 ரன்களை குவித்து இருக்கிறார். சமீபத்தில் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். சச்சின் நீண்ட நாட்கள் செய்த சாதனையையும் இவர் முறியடித்து உள்ளார்.

ஏறக்குறைய சச்சின் 12 ஆயிரம் ரன்கள் எடுக்கத் தேவைப்பட்ட இன்னிங்ஸைவிட 58 போட்டிகள் குறைவாக 242 இன்னிங்ஸிலியே கோலி இந்தச் சாதனையை படைத்தார். ஆதலால் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நாள் போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்னைப் பொறுத்தவரை விராட் கோலிதான்” என சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

மேலும் “இந்திய அணி சேஸிங் செய்து வென்ற பல்வேறு போட்டிகளை ஆய்வு செய்தால் அதில் கோலியின் பங்களிப்பு பெரிதாக இருக்கும். இந்தியாவிற்காக சேஸிங்கில் பல போட்டிகளை கோலி வென்று கொடுத்து உள்ளார். கோலி எடுத்த ரன்களையோ அல்லது விக்கெட்டுகளையோ பார்க்காமல் அவர் அளித்த தாக்கத்தை எடுத்துக் கொண்டால் கடந்த 10 ஆண்டுகளில் கோலிதான் பெரிய தாக்கத்தை ஒரு நாள் போட்டிகளில் ஏற்படுத்தி உள்ளார் என்றும் சுனில் கவாஸ்கர் கூறினார்.

இந்த விவாதத்தில் பங்கு பெற்ற மேத்யூ ஹைன் “கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என என்னை கேட்டால் அது மகேந்திர சிங் டோனிதான். டோனி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை, சாம்பியன் கோப்பையை வென்றது முக்கியமானது. அதிலும் உலகக் கோப்பையை வென்றது உண்மையிலேயே மிகப்பெரிய மைல்கல். இதற்குமுன் ஏராளமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். ஆனால் உலகக்கோப்பை போட்டிக்கு நாம் தயாராகி வரும்போது அணிக்கு சிறந்த தலைவர் மட்டும் இருந்தால் போதாது. அமைதியான வலிமையான நடுவரிசையில் நிலைத்து ஆடக்கூடிய வீரர் தேவை. அதாவது டோனியை போல் கேப்டன் தேவை” எனக் கூறியுள்ளார்.

ஸ்டார் போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் கனெக்டெட் எனும் நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த விவாதம் கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் ரசிக்க வைத்தது. விவாதத்தில் பங்குபெற்ற இருவரும் கோலி மற்றும் டோனியைக் குறித்து பல வரிசையான புள்ளிவிவரங்களை எடுத்து கூறி விவாதத்தை சூடுபிடிக்க வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.