close
Choose your channels

இன்ஸ்டாகிராமில் ரவுண்டு கட்டிக் கலக்கும் விராட் கோலி-அனுஷ்கா ஜோடி!!! காரணம் இதுதான்…

Wednesday, December 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்ஸ்டாகிராமில் ரவுண்டு கட்டிக் கலக்கும் விராட் கோலி-அனுஷ்கா ஜோடி!!! காரணம் இதுதான்…

 

விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஜோடி தற்போது படு சந்தோஷத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம் இன்னும் சில நாட்களில் இந்த தம்பதியினருக்கு புது வாரிசு வரப்போகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டு விட்டு பிறகு விராட் கோலி தாயகம் திரும்ப உள்ளார்.

இந்நிலையில் உலக அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதல் 25 நபர்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் இடம் பிடித்து உள்ளன்ர். உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் நபர்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் விராட் கோலி 11 ஆவது இடத்தையும் அனுஷ்கா சர்மா 24 ஆவது இடத்தையும் பிடித்து உள்ளார். மேலும் இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் சராசரியாக 2.6 மில்லியன் பார்வையாளர்களை ஈர்ப்பதாக கணக்கு கூறப்பட்டு உள்ளது. இதனால் அதிகபட்ச ரேங்கை விராட் கோலி பெற்று இருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 17 ஆவது இடத்தைப் பெற்று உள்ளார்.

உலகிலோய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தும் நபராக இருந்து வருவது கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர்தான் இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து உள்ளார். இவரது ஒரு பதிவு சராசரியாக 4.6 மில்லியன் பார்வையாளர்களை சென்று அடைவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் விராட் கோலி, அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடிக்கு அடுத்தப் படியாக பாலிவுட் நடிகைகள் காத்ரினா கைப் மற்றும் தீபிகா படுகோனே போன்றோரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆதிக்கம் செலுத்தும் நபர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் முதல் 50 நபர்களின் பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் காத்ரினா கைப் 43 ஆவது இடத்தையும் தீபிகா படுகோனே 49 ஆவது இடத்தையும் பிடித்து உள்ளனர். இவர் பதிவிடும் விழிப்புணர்வு பரப்புரைகள் பார்வையாளர்களின் வருகையை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேபோல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் சார்பில் ஒரே ஒருவர்தான் இடம்பெற்றார். அதில் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி 26 மில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டி 66 ஆவது இடத்தைப் பிடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.