close
Choose your channels

இரண்டு வருட பகையை தீர்த்த விராத் கோஹ்லி!

Saturday, December 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடைசி வரை அவுட் ஆகாமல் 94 ரன்கள் எடுத்தது இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

இந்த நிலையில் ஆட்டத்தின் இடையில் சுவராசியமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மேற்கு இந்திய தீவு வீரர் வில்லியம்ஸ் பந்து வீசிய போது அவரது பந்தில் விக்கெட் விழுந்த போது அவர் ஒரு நோட் புக்கை குறிப்பது போல் செய்து காட்டி பேட்ஸ்மேனை வெறுப்பேற்றினார். இதனை அடுத்து பேட்டிங் செய்ய வந்த விராத் கோலி அதே வில்லியம்ஸ் பந்தில் ஒரு சிக்சரை அடித்து, அதே போல் நோட்புக்கில் குறிப்பிடுவது போல் எழுதி வில்லியம்சை வெறுப்பேறினார்.

இதனை அடுத்து இந்த போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி இதுகுறித்து கூறிய போது ’கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியின் போது பந்து வீச்சாளர் வில்லியம்ஸ் தனது விக்கெட்டை எடுத்தவுடன் நோட் புக்கில் குறித்து வைத்துக் கொள்ளும்படி சைகை காட்டினார். அதை நான் மறக்கவில்லை. இதனையடுத்தே அவரது பந்தில் சிக்ஸர் அடித்து விட்டு அதே போல் நான் அவருக்கு நோட்புக்கில் எழுதுவதுபோல் செய்து காட்டி அவருக்கு திருப்பி கொடுத்துள்ளேன். மற்றபடி அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று தெரிவித்தார்

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.