திவாலாகி விடுவோம் போல… பாதுகாப்பு வேணும்… நிதிமன்றத்தை நாடியிருக்கும் பிரபல விமான நிறுவனம்!!!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

 

அமெரிக்காவில் இயங்கிவரும் பிரபல விமான சேவை நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான மனு ஒன்றை அளித்து இருக்கிறது. அந்த மனுவில் கொரோனா தாக்கத்தால் எங்களுடைய நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே கடன் சுமை அதிகரித்து இருப்பதால் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கிவிட்டோம். குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு விமான நிறுவனத்தை இயக்கி வருகிறோம். அந்த குறைந்த பணியாளர்களுக்கும் அடுத்த மாதம் சம்பளம் கொடுக்கக் கூட எங்களிடம் பணம் இல்லை. விமானத்தின் பராமரிப்புக்கூட பணமில்லாத நிலையில் இருக்கும்போது கடன் காரர்கள் நெருக்குதல் கொடுக்கின்றனர்.

இதனால் மேலும் மறுகட்டமைப்பு செய்ய வெவ்வேறு வழிமுறைகளில் கடன் வாங்க உத்தேசித்துள்ளோம். அந்தக் கடன் தொகை வருகிற அக்டோபரில்தான் கைக்கு கிடைக்கும். அதுவரை எங்களுடைய விமான நிறுவனத்தின் சொத்துகளையும் விமானங்களையும் திவாலாகி விடாமல் இருக்க எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியிருக்கிறது. விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் இங்கிலாந்தை சார்ந்த ரிச்சர்ட் பான்சன் என்பவரால் தொடங்கப்பட்டது. 51 பங்குகள் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்திற்கும் 49 சதவீத பங்குகள் டெல்டா நிறுவனத்திற்கும் சொந்தமானது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளின் நீதிமன்றங்களில் தற்போது மனு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே இந்நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிறுவனமே திவலாகி விடும் என பயந்து நீதிமன்றத்தை நாடியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது கொரோனா காலத்தில் விமான சேவை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அந்நிறுவனங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவில் இருந்து விடுபட்ட நூற்றுக்கு 90 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கு… பகீர் தகவல்!!!

கடந்த டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலாக வுஹான் மாகணத்தின் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா பரவியதாகக் கூறப்படுகிறது.

லெபனான் போன்று சென்னைக்கும் ஆபத்தா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் பகீர் தகவல்!!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர்

காதில் இருந்த கம்மலை விற்று மகளுக்காக ஸ்மார்ட் போன் வாங்கிய தேவதாசிப்பெண்!!!

ஆந்திராவில் குழந்தைகளின் படிப்புக்காக தாலியைவிற்று டிவி வாங்கிய பெண்மணியைப் போல தற்போது கர்நாடகாவிலும் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கொரோனா தொற்று இதயத்தையும் பதம் பார்க்குமா??? ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

பொதுவாக கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் எஸ்.வி.சேகர்: முதலமைச்சர் பழனிசாமி

கடந்த இரண்டு நாட்களாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்வதும், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்து வருவதுமான