ஒரு மணமகன் - இரு மணமகள் திருமணத்தில் திடீர் திருப்பம்

  • IndiaGlitz, [Monday,September 04 2017]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் ஒரு மணமகன் - இரு மணமகள் குறித்த திருமண பத்திரிகை வைரலாகி வந்தது அனைவரும் அறிந்ததே. விருதுநகர் மாவட்டம் வெள்ளையாபுரம் என்ற பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தாய்மாமன் மகளான ரேணுகா தேவி மற்றும் இன்னொரு மாமா மகளான காயத்ரி ஆகியோர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்யவிருப்பதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சமூக நலத்துறை அதிகாரிகள் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களிடம் சென்று ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்தால் வழக்கு பதியப்படும் என்று எச்சரித்தனர். இதனையடுத்து ரேணுகாதேவியுடன் மட்டுமே ராமமூர்த்தியின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், தவறுதலாகப் பத்திரிகையில் காயத்ரி பெயர் இடம்பெற்றுவிட்டதாகவும் இருவீட்டார்களும் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சமூகநலத்துறை அதிகாரிகள் முன்பு ரேணுகாதேவியைத் திருமணம் செய்துகொண்டார் ராமமூர்த்தி. இருப்பினும் மணமகன் வீட்டாரை தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் கண்காணித்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

புளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் தண்டனை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

புளூவேல் ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்களின் உயிர்கள் நாளுக்கு நாள் பலியாகி கொண்டே வரும் நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும்...

உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் தனி அதிகாரிகள் மூலமே நிர்வாகம் நடந்து கொண்டிருக்கின்றது...

வெற்றி மேல் வெற்றி கிடைக்க வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்

முன்றே படங்கள் மட்டுமே இயக்கி, அதில் ஒன்றில் தேசிய விருது பெற்று, முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் வெற்றிமாறன் மட்டுமே...

பிக்பாஸ்: நாடகக்காரி விருதை நாடகக்காரியிடம் இருந்து பெற்ற சுஜா

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70வது நாளை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு விருது வழங்கும் நடைபெறுவதாக இன்றைய புரமோ வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல மறுத்த பிரபல நடிகை

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேறு புதிய போட்டியாளர்கள் கிடைக்காததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே மீண்டும் மீண்டும் இடம்பெற்று வருகின்றனர்...