close
Choose your channels

ஒரு மணமகன் - இரு மணமகள் திருமணத்தில் திடீர் திருப்பம்

Monday, September 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் ஒரு மணமகன் - இரு மணமகள் குறித்த திருமண பத்திரிகை வைரலாகி வந்தது அனைவரும் அறிந்ததே. விருதுநகர் மாவட்டம் வெள்ளையாபுரம் என்ற பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தாய்மாமன் மகளான ரேணுகா தேவி மற்றும் இன்னொரு மாமா மகளான காயத்ரி ஆகியோர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்யவிருப்பதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சமூக நலத்துறை அதிகாரிகள் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களிடம் சென்று ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்தால் வழக்கு பதியப்படும் என்று எச்சரித்தனர். இதனையடுத்து ரேணுகாதேவியுடன் மட்டுமே ராமமூர்த்தியின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், தவறுதலாகப் பத்திரிகையில் காயத்ரி பெயர் இடம்பெற்றுவிட்டதாகவும் இருவீட்டார்களும் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சமூகநலத்துறை அதிகாரிகள் முன்பு ரேணுகாதேவியைத் திருமணம் செய்துகொண்டார் ராமமூர்த்தி. இருப்பினும் மணமகன் வீட்டாரை தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் கண்காணித்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.