என் உயிருக்கு ஆபத்து: விஷாலின் பெண் கணக்காளர் குற்றச்சாட்டு!

  • IndiaGlitz, [Sunday,July 05 2020]

நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்த பெண் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை கையாடல் செய்துவிட்டதாக விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த புகார் மீது சென்னை விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கணக்காளர் ரம்யா, தனது உயிருக்கும் தனது குடும்பத்தின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் கையாடல் செய்துள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள கணக்காளர் ரம்யா தமது வீட்டிற்கு வந்து, ஹரியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் தமக்கும், தமது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பொது இடத்தில் வைத்து கணக்குகளை ஒப்படைக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் விஷால் பிலிம் பேக்டரி மேலாளர் ஹரி இதுகுறித்து கூறியபோது, ‘பணம் கையாடல் செய்ததை ரம்யா ஒப்புக்கொண்டதாகவும், காவல்நிலையத்திற்கே வந்து ரம்யா சமரசம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.