கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜூக்கு விஷால் செய்த கெளரவம்

  • IndiaGlitz, [Monday,September 25 2017]

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்று நூலிழையில் கோப்பையை இழந்தது. இருப்பினும் வீராங்கனைகள் எடுத்த முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மிதாலிராஜ் அவர்களை கெளரவிக்கும் வகையில் அவருக்கு JFW விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கலந்து கொண்டார்

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 'பொதுவாக நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலுமு முன்கூட்டியே தயார் செய்து கொள்ள மாட்டேன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக தயார் செய்துவிட்டு வந்துள்ளேன். கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் மீது நான் வைத்துள்ள மதிப்பும் மரியாதை காரணமாக நான் என்னை தயார்படுத்தி இந்த விழாவில் கலந்துள்ளேன். நான் அவருடைய தீவிர ரசிகராக இருப்பதற்கு அவருடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மட்டும் காரணம் இல்லை. இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலக மேப்பில் இடம்பெற செய்த அவரது தீவிர முயற்சிக்கும் சேர்த்துதான் ரசிகரானேன். அவர் பல இளம்பெண்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும் ஒரு நபராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி' என்று விஷால் பேசினார்.

More News

இனிமேல் அரசியலுக்கு வரும் நடிகர்கள் தோல்வியடைவார்கள்: திருமுருகன் காந்தி

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்பட திரைநட்சத்திரங்கள் பலர் மிக விரைவில் அரசியல் களம் புகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் கமல்ஹாசன் முந்திவிடுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைமுன்னோட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதில் இருந்தே தமிழ் திரையுலகினர்களின் பார்வை ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பியுள்ளது.

நொய்யல் ஆற்றின் நுரைக்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம்: தமிழக அமைச்சர்

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன், பொதுமக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு காரணம் என்று கூறியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்': திரை முன்னோட்டம்

இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராகிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அடுத்த படம் ஸ்பைடர்'. நம்மூர் விஜய்க்கு சமமாக தெலுங்கில் பிரபலமான மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்

'இமைக்கா நொடிகள்' சிங்கிள் டிராக் ரிலீஸ் எப்போது?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.