விஷாலின் வேலைநிறுத்த திட்டத்திற்கு மேலும் ஒரு தடை!

  • IndiaGlitz, [Saturday,May 20 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1 முதல் ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவித்திருந்தார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகிஸ்தர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வழக்கம் போல் ஜூன் 1 முதல் திரையரங்குகள் இயங்கும் என்று அறிவித்தனர். மேலும் இம்மாதம் 26ஆம் தேதி திட்டமிட்டபடி 'தொண்டன்' மற்றும் 'பிருந்தாவனம்' திரைப்படங்கள் வெளியாகும் என்றும் விநியோகிஸ்தர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி, மாநாட்டில் பொழுதுபோக்கு மற்றும் வணிக நிறுவனக்களுக்கான வரியை 28 சதவீதமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார். இதன் காரணமாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் வணிக மால்களில் இயங்கும் திரையரங்குகளுக்கான சினிமா டிக்கெட் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திருட்டு டிவிடி, இணையதளங்களில் டவுன்லோடு பிரச்சனையால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களது எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் ஜிஎஸ்டி காரணமாக திரையரங்க கட்டணங்களின் விலை உயர்வு காரணமாக தியேட்டருக்கு வரும் கூட்டம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்டி அமலுக்கு வருவதால் அதற்கு முன்னரே தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ள படங்கள் அனைத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் இதுகுறித்து ஆலோசனை செய்ய அவசர கூட்டம் ஒன்று நடைபெறுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே விஷாலின் வேலைநிறுத்த திட்டம் திட்டமிட்டபடி நடக்குமா? என்பது குறித்த ஐயம் தற்போது எழுந்துள்ளது.

More News

சிம்புவின் 'AAA' படத்தின் முக்கிய கேரக்டரில் இயக்குனரின் தந்தை

சிம்பு நடித்து வரும் 'AAA' என்ற 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது.

ஏழைகளின் முதல்வரே! ரஜினி போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த ஐந்து நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்த நிலையில், ரசிகர்கள் முன் அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக பேசினார்...

ரஜினியின் அரசியல் பேச்சை கேட்டு கேட்டு போரடிக்கின்றது. பிரபல நடிகை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேச ஆரம்பித்து சுமார் 20 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது...