இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த விஷால்!

  • IndiaGlitz, [Monday,December 06 2021]

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’துப்பறிவாளன்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு வெளி வந்தது என்பதும் 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன் விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்து விஷால் இந்த படத்தின் மீதி பகுதியை தானே இயக்க இருப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் விஷால் இயக்கும் முதல் படமான ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஜனவரி மாதம் முதல் ’துப்பறிவாளன் 2’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் ஏப்ரல் மாதம் லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படம் மீண்டும் உயிர்ப்பெற உள்ளது என்பதை அடுத்து விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஷால், பிரசன்னா, ஆயிஷா, ரகுமான், நாசர், ஜெயப்பிரகாஷ், கௌதமி, சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பதும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நாமினேஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள காயினை பயன்படுத்திய நிரூப்: சிக்கியது யார்?

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் மற்றும் புதிய கேப்டன் தேர்வு நடைபெறும் என்பது தெரிந்ததே. இந்த வார புதிய கேப்டனாக பாவனி தேர்வு செய்யப்பட்ட நிலையில்

11 வயது மகனை கொன்று தற்கொலை செய்த பெற்றோர்: திடுக்கிடும் காரணம்!

தஞ்சை அருகே 11 வயது மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை: நயன்தாராவின் அடுத்த பட இயக்குனரின் பதிவு!

நயன்தாராவின் அடுத்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு வழக்கம்போல் ஒரு எச்சரிக்கை என அந்த படத்தின் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'மாநாடு' படத்திற்கு எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அழைத்து சென்ற கலெக்டர்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படத்திற்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி அழைத்துச் சென்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

கேப்டன் பதவியேற்ற பாவனிக்கு இதுதான் தண்டனை: அக்சரா தந்த அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்களை, கேப்டன் பதவியை ஏற்கவிடாமல், தனது நாணயத்தின் சக்தி மூலம் கேப்டன் ஆகி வரும் நிகழ்வுகள்