close
Choose your channels

இரண்டு கணவர்கள் இருந்தும் நடிகைக்கு உதவி செய்த விஷால்: அப்படி என்ன செய்தார்?

Tuesday, July 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் மலையாள நடிகை இரண்டு முறை திருமணம் செய்த போதிலும் அந்த இரண்டு கணவர்களும் செய்யாத உதவியை நடிகர் விஷால் செய்து வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷர்மிளா. குழந்தை முதலே நடித்து வரும் இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களிலும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகை சார்மிளா, கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். அதன் பின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்த ஷர்மிளாவுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் தற்போது ராஜேஷ் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மகனுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் ஷர்மிளாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து சிகிச்சை செய்ய பணம் இல்லாததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும் ஷர்மிளா மகனின் பள்ளிக்கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் நடிகர் விஷால் தான் செலுத்தி வருகிறார் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தனது மகனுக்கு மட்டுமின்றி ஏராளமான குழந்தைகளின் படிப்புக்காக விஷால் சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஒவ்வொரு முறை தனது மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்திய பின்னர் ’உங்களையும் உங்கள் மகனையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என்று மெசேஜ் மட்டும் விஷால் அனுப்புவார் என்று ஷர்மிளா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.