close
Choose your channels

விஷாலின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி தொடக்கம்!

Saturday, March 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்து வரும் ’துப்பறிவாளன் 2’ படத்தின் பிரச்சனை குறித்து விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையே ஒரு பக்கம் நீண்டு கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான பூஜை இன்று சென்னையில் உள்ள டப்பிங் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஆனந்தன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் விஷால் உள்பட முக்கிய நடிகர்களின் டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் இதனை அடுத்து இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ராணுவ அதிகாரியாக விஷால், காவல்துறை அதிகாரியாக ஷரதா ஸ்ரீநாத், மற்றொரு முக்கிய கேரக்டரில் ரெஜினா நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷஙக்ர் ராஜா இசையமைக்கின்றார். இரும்புத்திரை படம் போலவே இந்த படமும் ஒரு ஆன்லைன் முறைகேடு குறித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.