ஒரே நாளில் வெளியான விஷாலின் மூன்று படங்கள் குறித்த அப்டேட்!

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

விஷால் நடித்த ’சக்ரா’, துப்பறிவாளன் 2 ‘ மற்றும் ஆர்யாவுடன் அவர் நடிக்கும் படம் என மூன்று படங்களின் அப்டேட்டுக்கள் ஒரே நாளில் வெளிவந்திருப்பது விஷால் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது

விஷால் நடிப்பில், இளையராஜா இசையில், மிஷ்கின் இயக்கி வந்த திரைப்படம் ’துப்பறிவாளன் 2’. இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதை அடுத்து விஷாலே இந்த படத்தின் மீதி பகுதியை இயக்க உள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்கான பூஜை சமீபத்தில் நடந்தது

இதே நாளில் விஷாலின் ’சக்ரா’ படத்தின் பின்னணி வேலைக்கான பூஜையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என தெரிகிறது

அதுமட்டுமின்றி ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் ஓப்பனிங் பாடலின் பாடலின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இந்த பாடலுக்கு பிருந்தா நடன இயக்குனர் ஆக பணியாற்றி உள்ளார். தமன் இசையில் தெருக்குரல் அறிவு பாடல் வரிகளில் உருவான பாடல் படப்பிடிப்பு முடிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

More News

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு

விருதுநகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வித்தியாசமான விநாயகர் சிலைகளுடன் கொலு… அசத்தும் சென்னை பெண்!!!

நவராத்திரி வழிபாடுகளில் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது கொலு வழிபாடு. இந்தக் கொலு வழிபாடு வேறுபாடு உள்ள இந்த சமூகத்தில்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மூலிகை தாவரம்…

எக்கினாப்ஸ் எனும் வகையைச் சார்ந்த 2 புதிய மூலிகை வகை செடியை விஞ்ஞானிகள் வடக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் புதிதாகக் கண்டுபிடித்து உள்ளனர்.

அர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி: ஒரே நாளில் என்ன நடந்தது?

கடந்த சில நாட்களாகவே அர்ச்சனா மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் பிரச்சினை நீடித்து வந்த நிலையில் நேற்று அந்த பிரச்சனை பெரிதாக வெடித்து.

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தமிழக முதல்வர்… புதிய திட்டத்தால் குவியும் பாராட்டுகள்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் அதன் மூலம் புதிய தொழில் திட்டங்களை மேம்படுத்தும் வகையிலும் புதிய திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.