படப்பிடிப்பின்போது விஷாலுக்கு மீண்டும் காயம்: மருத்துவமனையில் அனுமதி!

  • IndiaGlitz, [Thursday,August 11 2022]

விஷால் நடித்த ’லத்தி’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்கனவே இரண்டு முறை அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், காயத்தில் இருந்து மீண்ட அவருக்கு தற்போது மீண்டும் ’மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஷால் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார் என்பதும் ஜீவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக 1990 களில் இருந்த அண்ணாசாலை போன்ற செட் போடப்பட்டு அந்த செட்டில் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ’மார்க் ஆண்டனி’ படத்தின் ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பின்போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு முறை ’லத்தி’ படத்தின் படப்பிடிப்பின் போது காயமடைந்த விஷால் தற்போது மீண்டும் அடைந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

'கோச்சடையான்' பட வழக்கு: லதா ரஜினிகாந்த் குறித்து முக்கிய உத்தரவு பிறப்பித்த கர்நாடகா ஐகோர்ட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'கோச்சடையான்' பட வழக்கு குறித்து கர்நாடக ஐகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி: இயக்குனரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் திரையரங்கிலும் 'O2' என்ற திரைப்படம் ஓடிடியிலும் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. 

கவர்னரை சந்தித்தவுடன் மோடி சொன்னதை நிறைவேற்றிய ரஜினி: சமூக வலைத்தளங்களில் வைரல்!

ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் கவர்னரை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஆகியுள்ள நிலையில் கவர்னரை சந்தித்த அடுத்த இரண்டு நாட்களில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தேசியக்கொடியை பதிவு செய்துள்ளார்

நீச்சல் குளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்: நடிகை சினேகாவின் வைரல் புகைப்படங்கள்!

நடிகை சினேகா தனது மகனின் பிறந்தநாளை நீச்சல் குளத்தில் கொண்டாடிய புகைப்படம் உள்பட பல புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

இன்று ரக்சாபந்தன் கொண்டாட்டம்: நயன்தாரா யாருக்கு ராக்கி கயிறு கட்டினார் தெரியுமா?

இன்று நாடு முழுவதும் ரக்ஷாபந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் பலர் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி இந்த கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது