close
Choose your channels

விஷால் மேனேஜரின் கார் கண்ணாடி உடைப்பு: பெரும் பரபரப்பு

Tuesday, July 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ரம்யா என்ற பெண் கணக்காளர் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை கையாடல் செய்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் புகாரளித்தார்.

இந்த புகார் குறித்து ரம்யா கூறியபோது விஷாலின் மேனேஜர் ஹரியின் ஆதரவாளர்கள் தன்னுடைய வீட்டிற்கு வந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் தமக்கும், தமது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து என்றும், தான் எந்தவித கையாடலும் செய்யவில்லை என்றும், பொது இடத்தில் வைத்து கணக்குகளை ஒப்படைக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் வீட்டின் முன் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நிலையில் மர்ம நபர்களால் அந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெண் கணக்காளர் ரம்யா மீது ஹரி கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்திருந்த, நிலையில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.