close
Choose your channels

சரத்குமார், ராதிகாவுடன் விஷால் ரகசிய சந்திப்பா?

Tuesday, May 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நாசர், விஷால், கார்த்தி உள்பட பலர் மீண்டும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்முனையில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகிய இருவர் மீதும் நீதிமன்ற வழக்கு ஒன்று இருப்பதால் அதனை காரணம் காட்டி நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரும் இம்முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையுலகில் விஷாலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவினர் விஷாலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. இதுகுறித்து விஷால் தொடர்ந்த வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சரத்குமார், ராதிகாவை நடிகர் விஷால் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது மூவரும் பல விஷயங்களை மனம்விட்டு பேசியதாகவும் ஊடகம் ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பு குறித்த செய்தியை நடிகர் சரத்குமார் மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஊடகம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட சரத்குமார், 'உண்மை இல்லாமல் பதிவிடவேண்டாம் காரணங்கள் தங்களுக்கு எதுவாக இருந்தாலும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.