close
Choose your channels

தமிழக ஆளுனருடன் விஷால் சந்திப்பு: நடிகர் சங்க தேர்தல் விவகாரமா?

Wednesday, June 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் இடமான சென்னை ஜானகி எம்ஜிஆர் கல்லூரி வளாகத்திற்கு பாதுகாப்பு கேட்டு விஷால் தாக்கல் செய்த மனு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது, 'ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. தேர்தல் நடத்தும் மாற்று இடத்தை இன்று நடிகர் சங்கம் பரிசீலித்து ஐகோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க, நடிகர் விஷால் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் சற்றுமுன் சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை நடிகர் விஷால் சந்தித்தார்.

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக நடைபெறும் இந்த சந்திப்பில் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் உடனுள்ளனர். தேர்தல் நடத்தும் இடம் குறித்து ஆளுனரிடம் விஷால் ஆலோசனை செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து இன்னும் சில நிமிடங்களில் விஷால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.