close
Choose your channels

ஐதராபாத்தை நோக்கி படையெடுக்கும் விஷால் படக்குழு: காரணம் இதுதான்!

Monday, June 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளில் அறிவித்து கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்றும் அதேபோல் திரையரங்குகள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்ல உள்ளனர்.

குறிப்பாக விஷால் நடிப்பில் து.பா.ஆ சரவணன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறுகிய காலத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் படம் மட்டுமன்றி வேறு சில தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.