'விஷால் 28' படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 15 2019]

விஷால் தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம் ‘ஆக்சன்’ இன்று தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்திற்கான புரோமோஷன் அபாரமாக இருந்ததால் இந்த படத்தின் ஓபனிங் வசூல் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஷாலின் ‘ஆக்சன்’ திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’சக்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் கவுதம்மேனன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

எம்.எஸ் ஆனந்தன் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்ட்ரி தயாரிக்கவுள்ளது. தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஷாலுடன் ரெஜினா, ஷாரதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ரோபோசங்கர் நடிக்கவுள்ளார். இன்று ஒரே நாளில் விஷாலின் ஆக்சன் படமும் அவர் நடிக்கவிருக்கும் 28வது படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி உள்ளது அவரது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக உள்ளது.

More News

சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணையும் முதல் படம்

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ஒன்றை கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கியுள்ளார்

அசாம் மாநிலத்தில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற 'தெறி'

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் 'தெறி'. இந்த படத்தின் கதை தனது மகளின் பாதுகாப்பிற்காக முன்னாள் காவல்துறை அதிகாரி

இப்படி ஒரு ஹெல்மெட் தேவையா? தூக்கி போட்டு உடைத்த போலீஸ்!

ஹெல்மெட் என்பது வாகனம் ஓட்டுபவரின் உயிரை காப்பாற்றும் முக்கிய அம்சம் என்பதால் தான் சென்னை ஐகோர்ட், அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் போட வேண்டும்

எங்க திரும்பினாலும் நம்ம நியூஸ்தான்: சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் உற்சாகம்

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' திரைப்படத்திற்கு நீதிமன்றம் சற்றுமுன் இடைக்கால தடை விதித்ததால் இந்த படம் திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளிவருமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.