விமர்சனம் எழுதும் பத்திரிகையாளர்களுக்கு விஷாலின் அன்பு வேண்டுகோள்

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

விக்ரம் பிரபு நடித்த 'நெருப்புடா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சற்று முன்னர் சென்னையில் நடந்தது. இந்த விழாவிற்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதிலகம் பிரபு, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் பத்திரிகையாளர்களுக்கு விஷால் ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'ஒரு திரைப்படம் வெளிவந்தவுடன் தயவு செய்து மூன்று நாள் கழித்து நான்காவது நாள் விமர்சனம் செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜர்னலிசம் என்பது ஒரு செய்தியை மக்களுக்கு விரைவில் கொண்டு போய் சேர்க்கும் ஒரு முக்கிய கருவி என்பது உண்மையென்றாலும் ஒரு மனிதத்தன்மையுடன் நான் கேட்டுக்கொள்வது மூன்று தினங்களுக்கு பின் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதுதான்.

ஒருசில விமர்சகர்கள் தங்களுடைய சொந்த கருத்தை தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்து போல ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தில் புகுத்துகின்றனர். அதுவும் முதல் காட்சி முடிந்தவுடனே இவ்வாறு விமர்சனம் எழுதுவதால் படத்தின் வசூல் பாதிக்கின்றது. எனவே ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவராக, ஒரு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக, ஒரு நடிகராக, ஒரு மனிதராக திரைப்படங்களின் விமர்சனத்தை நான்காவது நாள் வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று விஷால் கூறியுள்ளார்.

More News

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: கூட்டுச்சதி என டிடிவி தினகரன் கண்டனம்

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு மிக அதிகமான அளவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தேர்தலை அதிரடியாக தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்ப்போம்...

டோரா-கவண் 2வது வார வசூல் நிலவரம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான திகில் படமான 'டோரா' மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' ஆகிய படங்கள் இரண்டாவது வாரத்திலும் திருப்தியான வசூலை தந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

'8 தோட்டாக்கள்' ஓப்பனிங் வசூல் எப்படி?

பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்களின் உதவியாளரான ஸ்ரீகணேஷ் என்ற இயக்குனரின் முதல் படமான '8 தோட்டாக்கள்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது....

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து. தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இந்த தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் நியாயமாக தேர்தல் நடத்தும் சூழல் வந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...

தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு டபுள் விருந்து

இளையதளபதி விஜய் தற்போது 'தளபதி 61' படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது...