நகைக்கடை அதிபரின் வாரிசை கரம்பிடிக்கும் விஷால் சகோதரி

  • IndiaGlitz, [Saturday,August 19 2017]

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் அவர்களின் சகோதரி ஐஸ்வரியாவின் திருமணம் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் விஷால் பிசியாக உள்ளார்.

எம்.பி.ஏ படித்துள்ள விஷாலின் தங்கை ஐஸ்வர்யா, விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரின் மகன் உம்மிடி கிருத்திஷ் தான் ஐஸ்வர்யாவை கரம் பிடிக்க போகும் மாப்பிள்ளை. இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் மேயர் ராமநாதன் ஹாலில் உம்மிடி கிருத்தீஷ்-ஐஸ்வர்யா திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு நகைக்கடை அதிபர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனவே விஷால் வீட்டில் இன்னும் திருமணம் ஆகாத ஒரே நபர் விஷால் மட்டுமே என்பதும் அதுவும் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்தவுடன் அந்த கட்டிடத்தின் முதல் மங்கள நிகழ்ச்சியாக நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தளபதியின் 'மெர்சல்' படத்தில் திடீரென இணைந்த சந்தானம்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சந்தானம் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

தி.நகர் பற்றிய சிறப்பு தகவல்கள்

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்று தியாகராய நகர் என்று கூறப்படும் தி.நகர். . திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிட்டி தியாகராயர் அவர்களின் நினைவாக கடந்த 1925ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பகுதிதான் இந்த தியாகராயர் நகர் என்ற தி.நகர்...

பழையென கழிந்தே தீர வேண்டும்: கமல் கூறுவது யாரை?

டுவிட்டரிலும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி கமல் கூறும் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள நீண்ட நேரம் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது...

குழந்தை பெற்று கொள்ள பயமாக இருக்கின்றது. பிரதமரிடம் பிரபல நடிகை கூறியது ஏன்?

பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபதி என்பவர் தனது டுவிட்டரில் பிரதமர் மோடியின் டுவிட்டர் அக்கவுண்டை டேக் செய்து, 'நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதால் எனக்கு பெண் குழந்தைகள் பெற்று கொள்ள பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது கருத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய&

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக டல்லடித்து கொண்டிருந்தாலும் சனி, ஞாயிறு மட்டும் உலக நாயகன் கமல்ஹாசன் வருகை காரணமாக களைகட்டும்.