சொன்னதை செய்ய ஆரம்பித்துவிட்டார் விஷால்! வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் விஷால் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று புதிய மற்றும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பது தான்.

அரசியல்வாதிகள் போல் தேர்தல் நேரத்தில் வாக்கு கொடுத்துவிட்டு வெற்றி பெற்றவுடன் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடாமல் சொன்னதை நிறைவேற்றும் குணம் கொண்டவர் விஷால் என்பது நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்தவகையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திலும் சொன்னதை செய்ய ஆரம்பித்துவிட்டார் விஷால்.

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் '8 தோட்டாக்கள்'. ரூ.4 கோடி முதலீட்டில் உருவான இந்த படம் நல்ல வசூலை அள்ளினாலும் விநியோகிஸ்தர்கள் லாபம் போக தயாரிப்பாளர் கைக்கு வந்த லாபம் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் தானாம். இதுகுறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் விஷாலிடம் முறையிட, விஷால் கேபிளில் இந்த படத்தை ஒரே ஒரு முறை ஒளிபரப்பும் உரிமையை ரூ.45 லட்சத்திற்கு விற்று கொடுத்து தயாரிப்பாளருக்கு உதவி செய்துள்ளார். தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட்டதால் கிடைத்த லாபத்தை ஒரே ஒருமுறை கேபிளில் ஒளிபரப்பும் உரிமை மூலம் பெற்றுத்தந்த விஷாலை அந்த தயாரிப்பாளர் தலையில் வைத்து கொண்டாடி வருகிறார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு 99 வருடங்களுக்கு ஒளிபரப்பும் உரிமையை பெற்று வரும் தனியார் சாட்டிலைட் தொலைக்காட்சிகளுக்கும் விஷால் விரைவில் செக் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பாகுபலி 2' வெற்றியை அடுத்து ராஜமெளலியின் அடுத்த பயணம் ஆரம்பம்

கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் மிக அபாரமான வசூலை பெற்று வருகிறது. வெளியான நான்கே நாட்களில் ரூ.500 கோடி என்ற வசூலை தொட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே எதிர்பார்த்த ரூ.1000 கோடி வசூலை மிக விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

யாராவது இந்த கேள்வியை கேட்டால் கன்னத்தில் பளாரென அறையுங்கள். பிரேமலதா விஜயகாந்த்

ஜெயலலிதாவின் மர்ம மரணம், கருணாநிதியின் உடல்நிலை, சசிகலா-தினகரன் ஜெயில், அதிமுகவில் பிளவு என தமிழகம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பில் இருந்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இவை குறித்து பெரிதாக எந்தவித விமர்சனமும் செய்யாதது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகமிழக்க செய்துள்ளது...

இவர்கள் இருவரும் இணைந்தால் 'அவதார்' சாதனையை முறியடிக்கலாம். அல்போன்ஸ்புத்ரன்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் பெரும் வசூலை குவித்தது. முதல் பாகம் சுமார் ரூ.600 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது பாகமும் வெளியான 4 நாட்களிலேயே ரூ.300 கோடியை நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தினகரன் பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தாரா சுகேஷ் சந்திரா?

அதிமுகவின் இரட்டை இலை சின்னதை குறுக்கு வழியில் பெற தேர்தல் கமிஷனுக்கு சுகேஷ் சந்திரா என்ற தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் டெல்லி போலீசார் மிக தீவிரமாக தொடர்ந்து விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்...

நாம் செய்ய தவறியதை பைரஸியினர் சரியாக செய்கின்றனர். எஸ்.எஸ்.ராஜமெளலி

இன்று உலகம் முழுவதிலும் உள்ள திரையுலகினர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை பைரஸி. குறிப்பாக் கோலிவுட்டில் இந்த பிரச்சனை தலைவிரித்து ஆடி வருகிறது. படம் ரிலீஸ் தினத்தில் ஃபேஸ்புக்கில் லைவ் செய்வது, ரிலீஸ் தினத்தன்றே திருட்டுவிசிடி, இணையதளத்திலும் ரிலீஸ் ஆவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதை ஒழிக்க நடிகர் சங்கமும், தயாரி