அசோக்குமார் தற்கொலை எதிரொலி: விஷால் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Wednesday,November 22 2017]

பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகை கிட்டத்தட்ட ஆட்டங்காண வைத்துள்ளது. பல தயாரிப்பாளர்கள் இதுபோன்று மிரட்டப்படுவதாகவும் அவர்களை காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் விஷால் அதிரடியாக உடனே இதுகுறித்து ஆய்வு செய்ய களமிறங்கியுள்ளார். முதல்கட்டமாக வரும் இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள சுமார் 50 படங்களின் தயாரிப்பாளர்களில் யார் மிரட்டப்படுகிறார்கள், அவர்கள் வாங்கிய கடன் தொகை எவ்வளவும், கட்டிய வட்டி எவ்வளவு? போன்ற விபரங்களை சேகரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழு கொடுக்கும் அறிக்கையை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அவர் முடிவு செய்துள்ளாராம். பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களை கண்டறிந்து அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவது தான் இந்த குழுவின் பணி என்றும் கூறப்படுகிறது. இனிமேலாவது தயாரிப்பாளர்கள் விழித்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

 

More News

அஜித்தும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர் தான்: சுசீந்திரன்

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் உடலுக்கு திரையுலகமே ஒட்டுமொத்தமாக திரண்டு மலரஞ்சலி செய்து வரும் நிலையில் இயக்குனர் சுசீந்திரன்,

தொடரும் தற்கொலைகள்: என்ன செய்ய வேண்டும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுப்பது என்பது புதிதல்ல. தமிழ் சினிமாவின் முதுகெலும்பே பைனான்சியர்தான் என்று சொல்லலாம். கோடிகள் புரளும் இந்த துறையில் கைக்காசு போட்டு படம் எடுப்பது என்பது

சினிமாத்துறை இழுத்து மூட வேண்டிய நிலை வரும்: அமீர் எச்சரிக்கை

கந்துவட்டி கொடுமையால் இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் மறைவு, அனைத்து திரையுலகினர்களையும் பொங்கியெழ செய்துள்ளது.

சிறப்பு தோற்றத்தில் கௌதம் மேனன் நடிக்கும் அடுத்த படம்

'தீவிரம்' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் அதுவும் காவல்துறை அதிகாரி வேடத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளார்

அசோக்குமார் தற்கொலை எதிரொலி: அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை

நடிகர், இயக்குனர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக்குமார் நேற்று கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.