நடிகர் விஷால் திடீர் உண்ணாவிரதம்

  • IndiaGlitz, [Thursday,July 23 2015]

கேரள மாநிலத்தில் தெருவில் தெரியும் நாய்களால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்றும், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அம்மாநிலத்தின் பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி சமீபத்தில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு பிராணிகள் நல வாரிய உறுப்பினர்கள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் நாய்களை கொல்லக்கூடாது என நடிகர் விஷால் குரல் கொடுத்துள்ளார். இதற்காக வரும் 25ஆம் தேதி சென்னை வள்ளுவர் கூட்டத்தில் அவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், இந்த உண்ணாவிரதத்தில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பலர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிக்கு People For CATTE IN INDIA' என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கேரள அரசின் இந்த முடிவை எதிர்த்து பிரபல மலையாள நடிகர் மோகன்லால், நடிகை ராய்லட்சுமி உள்பட பலர் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்ணாவிரதத்தின் முடிவில் மனு ஒன்றை எழுதி அதை கேரள மாநில முதல்வர், ஆளுனர் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோர்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

தாத்தா சிவாஜியுடன் மோதும் பேரன் விக்ரம்பிரபு?

சிவாஜி குடும்பத்தின் கலை வாரீசான விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை...

ஆஸ்கார் நாயகனின் பாராட்டை பெற்ற 'பாகுபலி'

இந்திய சினிமாவில் உள்ள முக்கிய வி.ஐ.பிக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது சமீபத்தில் வெளியான...

பெயரை மாற்றி ரீ எண்ட்ரி ஆகியுள்ள பி.வாசு மகன்

ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, சந்திரமுகி, விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐ.பி.எஸ், சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல்...

விஜய்யின் 'புலி'யில் நானும் ஒரு கதாநாயகிதான். நந்திதா

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இரண்டு நாயகிகள் இருந்த நிலையில் மூன்றாவது நாயகியாக படத்தில்...

ஜி.வி.பிரகாஷ்-யுவன்ஷங்கர் கூட்டணியில் உருவான 'மாயக்காரி'

கோலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் இன்றைய இளையதலைமுறை இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், யுவன்ஷங்கர் ராஜா...