சீமக்கருவேல மரங்களை அழிக்கும் நடவடிக்கையில் விஷால்

  • IndiaGlitz, [Thursday,February 23 2017]

தமிழகத்தை எதிர்நோக்கியுள்ள அபாயங்களில் மிகவும் முக்கியமானது சீமக்கருவேல மரங்கள். பொன் விளையும் பூமியை மலடாக்கும் அபாயம் இந்த சீமக்கருவேல மரங்களால் உண்டு என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இடையே பரப்பி வருகின்ரனர். குறிப்பாக மாணவர்கள், சமூக நல ஆர்வலர்கள், ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் சீமக்கருவேல மரங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி பரங்கிப்படை ஊராட்சியில் ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடிகர் விஷால் மற்றும் தேவி அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் பொது மக்களுடன் சேர்ந்து அந்த கிராமத்தில் பலவருடங்களாக இருந்த சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்கள். மேலும் அந்த இடங்களை சுத்தம் செய்து நாட்டு மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.


நடிகர் விஷால் அவர்களுடன் நடிகர் செளந்தர்ராஜா, ஹரி அவர்களும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், அண்ணாமலை பல்கலை கழக துணை வேந்தர் மணியன், கல்வி இயக்குனர் மணிவண்ணன், கிராமத் துறை தலைவர் தேசிகன், பாலமுருகன் இவர்களுடன் NSS மாணவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள், கடலூர் மாவட்ட நாடக சங்க உறுப்பினர்கள், ஊர் பொது மக்கள், விஷால் நற்பணி இயக்கத்தின் நிருவாகிகள் கலந்து கொண்டு இந்த சமுக பணியில் ஈடுபட்டார்கள்.


இதேபோல் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சீமக்கருவேல மரங்களை அழித்துவிட அனைத்து தரப்பினர்களும் ஒன்றுசேர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

More News

தவறு செய்த முன்னாள் முதல்வரின் கூட இருந்ததால் சின்னம்மா தண்டிக்கப்பட்டார். அதிமுக பிரமுகர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையிலான அரசை சிறையில் இருக்கும் சசிகலா ஆட்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். சிறையில் இருந்து சசிகலா இடும் கட்டளையை முதல்வர் நிறைவேற்றி வருவதாகவும் இது ஒரு பினாமி அரசு என்றும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது...

புதுக்கட்சி தொடங்குகிறார் தீபா. தீபக்கிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம். என்ன ஆச்சு தமிழ்நாட்டுக்கு?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நாளை ஜெயலலிதாவின் பிறந்த நாளில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும், கட்சியின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாளை மாலை 6 மணிக்கு புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தீபா தெரிவித்துள்ளார்...

தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் தேதி-இடம் அறிவிப்பு

தமிழ் திரைப்பட சங்க தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த 5ஆம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது...

என்னை கேள்வி கேட்க வாக்காளர்களுக்கு உரிமையில்லை. கருணாஸ்

நகைச்சுவை நடிகர் கருணாஸ் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் சமீபத்தில் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தபோது கருணாஸ் சசிகலா அணிக்கு ஆதரவு அளித்தார்...

பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது