திரைப்படத்துறை வேலைநிறுத்தம்: விஷால் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Monday,May 22 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், சமீபத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒருசில கோரிக்கைகளை முன்வைத்து இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 30ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவித்தார்.

ஆனால் விஷாலின் இந்த வேலைநிறுத்த அறிவிப்புக்கு முதலிலேயே எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் எப்போதும் போல் 30ஆம் தேதி முதல் திரையரங்குகள் இயங்கும் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு விஷாலுக்கு ஒரு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று முடிவெடுத்தனர்.

மேலும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி 28% திரையுலகிற்கும் பொருந்தும் என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் அறிவிப்பு காரணமாக ஜூன் 30ஆம் தேதிக்குள் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களை வெளியிட அனைத்து தயாரிப்பாளர்களும் திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் தேவையில்லை என்றே பலர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன்படி வருகிற 30-ந் தேதி முதல் நடக்கவிருந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.

More News

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ-டைட்டில் குறித்த தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் மணிரத்னம் அடுத்த படவேலைகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்தார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

'விஐபி 2' படத்திற்காக தனுஷ்-கஜோலின் புதிய முயற்சி

தனுஷ், அமலாபால், கஜோல் உள்பட பலர் நடிப்பில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

சென்னை பாக்ஸ் ஆபீஸில் அசைக்க முடியாத இடத்தில் 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் நான்காவது வாரமாக வசூலை குவித்து வருகிறது...

அட்லியின் முதல் படத்திற்கு சென்னை பாக்ஸ் ஆபீஸின் நிலை என்ன?

'ராஜா ராணி', 'தெறி' என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, முதன்முதலாக தயாரித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

சாட்டிலைட் டிவியை அடுத்து விஷாலின் அடுத்த அதிரடி திட்டம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக விஷால் தலையிலான இளைஞர் படை பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி திருப்பங்கள், அறிவிப்புகள் வெளிவந்து தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்...