யானைகளின் வீட்டில் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்: 'காடன்' டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி!

  • IndiaGlitz, [Wednesday,March 03 2021]

பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வந்த ‘காடன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் பணிகளும் இறுதிகட்டத்தில் உள்ளன

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. யானைகள் பரம்பரை பரம்பரையாக தங்கியிருக்கும் காட்டிற்குள் புகுந்து அந்த காட்டை அழித்து நகரமாக்க முயற்சிக்கும் அமைச்சர் ஒருவருக்கும் யானைகளை காப்பாற்ற துடிக்கும் ஒருவருக்கும் நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் ட்ரெய்லரில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது

விஷ்ணு விஷால் மற்றும் ராணா டகுபதி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள் என்பது டிரைலரில் உள்ள காட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. அதே போல் ஜோயா ஹூசைன் மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். டிரைலரின் இறுதியில் யானைகளின் வீட்டில் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்’ என்ற வசனம் உள்பட இந்த படத்தின் வசனங்கள் அனைத்துமே கூர்மையாக உள்ளது.

சாந்தனு மொயித்ரா இசையில் அசோக்குமாரின் ஒளிப்பதிவில் புவன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஈராஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தனுஷ் பட நாயகி வீட்டில் வருமான வரி சோதனை!

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன்பின்னர் அஜித்தின் 'ஆரம்பம்' ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 2', ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை'

சென்னையில் ராதிகா போட்டி: எந்த தொகுதியில் தெரியுமா?

சமீபத்தில் 'சித்தி' எந்த தொலைக்காட்சி தொடரில் இருந்து விலகிய நடிகை ராதிகா முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியானது.

தமிழகம் பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு,

ஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது நடந்த கொடூரம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே காரில் 25 பேர் பயணம் செய்து உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஐடி ஊழலின் கதை: காஜல் அகர்வாலின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய ஐடி ஊழல் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்று தமிழ், தெலுங்கு, ஹிந்,தி கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.