நாங்கள் எடுத்து கொண்ட முதல் புகைப்படம்.. திருமண நாளில் விஷ்ணு விஷாலின் பதிவு..!

  • IndiaGlitz, [Monday,April 22 2024]

நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது மனைவியுடன் எடுத்த முதல் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2009 ஆம் ஆண்டு ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’குள்ளநரி கூட்டம்’ ’நீர்ப்பறவை’ ’முண்டாசுப்பட்டி’ ’இன்று நேற்று நாளை’ ’ராட்சசன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த ஆண்டு கூட அவர் நடித்த ‘லால்சலாம்’திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா என்ற பேட்மிண்டன் வீராங்கனையை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணம் ஹைதராபாத்தில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி நடந்தது

இந்த நிலையில் திருமணம் ஆகி இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவு பெறுவதை அடுத்து விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முதல் புகைப்படம் என்றும் இந்த மூன்று வருடத்தில் எங்களுடைய உறவு மிகவும் வலிமை அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

எங்களது நட்பு ஏழு வருடங்கள் கொண்டது என்றும் மூன்றாவது திருமண நாளை கொண்டாடி வருகிறோம் என்று விஷ்ணு விஷால் குறிப்பிட்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி.. இந்த ஒரு காரணத்திற்காக எடுத்த முடிவு..!

விஜய் தொலைக்காட்சி பிரபலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்த நிலையில் இந்த ஒரு காரணத்திற்காக தான் நான் விவாகரத்து செய்தேன் என நீண்ட நாட்களுக்கு

'கில்லி'யை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்.. பதிலுக்கு ஜப்பான் விஜய் ரசிகர்களின் தரமான சம்பவம்..!

தளபதி விஜய் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த 'கில்லி' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக புதிதாக ரிலீசான படங்களுக்கு இணையாக

'பிரேமலு' ஜோடி மாறிவிட்டதா? ஆளை மாற்றிய மம்தா பாஜூ.. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'பிரேமலு' தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது

வாடிவாசலுக்கு முன்பே வெற்றிமாறனின் இன்னொரு படம்.. ஹீரோ இந்த பிரபலம் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்குவார் என்று

'ஜெய்ஹோ' பாடலை ஏஆர்  ரஹ்மான்  கம்போஸ் செய்யவில்லையா? பிரபல இயக்குனர் பேட்டியால் பரபரப்பு..!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற படத்திற்காக கம்போஸ் செய்த 'ஜெய் ஹோ' என்ற பாடல் ஆஸ்கார் விருதை வென்றது என்பதும் இதன் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் உலக புகழ் பெற்றார் என்பது தெரிந்தது.