close
Choose your channels

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்!

Thursday, January 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ’எப்.ஐ.ஆர். என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

’திருடன் போலீஸ்’, உள்குத்து’ உள்பட ஒரு சில படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படத்தில் ரெஜினா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தில் ரெஜினா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் திடீரென தற்போது விஷ்ணு விஷால் இணைந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. விஷ்ணு விஷால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாரா? அல்லது நாயகனாக நடித்துள்ளாரா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தை ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் கிஷோர், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.